Saturday, July 21, 2007

இவர்களைத் திருத்தவே முடியாதா!?

எத்தனையோ கட்டுரைகள், பட்டிமன்றங்கள் இன்னும் என்ன உண்டோ அவ்வளவும் இதை நிறுத்த சொல்லி கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இதில் புதிது புதிதாக நட்சத்திரங்கள் உருவாகி, அவர்களுக்கும் இது போல் நடந்துகொண்டுதான் இருக்கிறது.!

இந்த படத்தை நான் தமிழ் முரசு நாளிதழில் சென்னை பதிப்பில் மூன்றாவது பக்கத்தில் தான் பார்த்தேன். அதில், இது நடந்தது நாகர்கோவிலில் என்று இருந்தது. சரி, நாகர்கோவில் பதிப்பில் எந்த பக்கத்தில் இருக்கிறது என்று பார்க்கலாம் என சென்றால், அதிர்ச்சி!

ஆம், முதல் பக்கத்தில் பாதி பக்கத்திற்கு இந்த படம்தான். சரி, இது சாதரண மாலை இதழ், என விட்டுவிடலாம் என்றால், இது போன்ற புகைப் படத்தை வெளியிட வைத்தது எந்த சக்தியாக இருக்கும்? என்ற சிந்தனை எனக்கு..

ஆனால் என்னால் யூக்கிக்க முடிகிறது.!

எனக்கு மனதில் உதிப்பதெல்லாம், இவர்களை திருத்த முடியாதா? என்பதுதான். எப்படி? Million Dollar Question! ..ம்ம்ம்ம்ம்ம்

‘தல’ க்கு பாலாபிஷேகம்... நடிகர் அஜித் நடித்த கிரீடம் படம் நாகர்கோவில் ஸ்ரீகார்த்திகை தியேட்டரில் இன்று வெளியானது. அவரது கட்அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

இந்தப் படத்தை சற்று பெரிதாக்கி பாருங்கள். அந்த இளைஞர்களின் முகத்தில் தெரியும் பெருமை, சாதனை செய்த பூரிப்பு! எல்லாம்..ம்ம்ம்ம்ம்ம்

தொழில்துறையில் பின் தங்கிய மாவட்டங்கள் என தென் மாவட்டங்களை சொல்வதுண்டு. அனால் இது பாரபட்சமின்றி எல்லா மாவட்டங்களிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த வரிசையில் தற்பொழுது சேர்ந்துகொண்ட நட்சத்திரம் "த்ரிஷா".

17 Comments:

Blogger சிவபாலன் said...

படம் & செய்தி:

நன்றி: தமிழ் முரசு

July 21, 2007 6:56 AM  
Anonymous Anonymous said...

ajith poster-il, "Thannadakkam" endru ezhuthi ullathu... semma thamaash :-)

July 21, 2007 7:21 AM  
Blogger சிவபாலன் said...

அனானி,

:)) :)) :))


வருகைக்கு நன்றி

July 21, 2007 9:08 AM  
Blogger  Subramanian said...

உலகத்திலேயே அதிக சதவீதம் இளைஞர்களைக் கொண்டது நம் தாய்த் திரு நாடு.அதில்,99.99சதவீதம் இளைஞர்கள் இத்தகைய ரசிகர் மன்ற வெறியர்கள் தான் என ஆணித்தரமாகச் சொல்லுவேன்.அது சரி.வழி காட்ட வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் தானே இக்கலாச்சாரத்தை வளர்த்தார்கள்.அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி.

July 21, 2007 9:55 AM  
Blogger Thekkikattan|தெகா said...

This comment has been removed by the author.

July 21, 2007 10:28 AM  
Blogger Thekkikattan|தெகா said...

இதுக்கெல்லாம் ஒரே தீர்வு. தண்ணீரின் விலை பல மடங்கு இந்த பிரபலங்களின் மார்க்கெட் விலையை விட அதிகரித்தால் தான் உண்டு. :-(

தண்ணீர் பஞ்சத்தால் இந்த அடி மடையர்கள் குடத்தை தூக்கிக் கொண்டு தெருத் தெருவாக அழைந்தால்தான் இந்த "பித்தம்" தெளியும் சிவா!!

July 21, 2007 10:46 AM  
Blogger சிவபாலன் said...

திண்டுக்கல் சர்தார்,


உங்கள் கருத்து ஏற்புடையதே!

கருத்துக்கு நன்றி!

July 21, 2007 8:44 PM  
Blogger சிவபாலன் said...

தெகா

உங்கள் ஆதங்கமும் கோபமும் புரிகிறது!

என்ன செய்யலாம் இவர்களை?ம்ம்ம்ம்

கருத்துக்கு நன்றி!

July 21, 2007 9:55 PM  
Anonymous Anonymous said...

தலையின் ரசிகர்களுக்கு ஒரு நியாயம்! தளபதியின் ரசிகர்களுக்கு ஒரு நியாயம்?

;-)))))))))))))))

http://sivabalanblog.blogspot.com/2007/06/fever.html

July 22, 2007 12:49 AM  
Blogger லக்ஷ்மி said...

//தண்ணீர் பஞ்சத்தால் இந்த அடி மடையர்கள் குடத்தை தூக்கிக் கொண்டு தெருத் தெருவாக அழைந்தால்தான் இந்த "பித்தம்" தெளியும் சிவா!//

இல்லை நண்பரே. அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் கூட வீட்டிலிருக்கும் தங்கச்சி, அம்மா ஆகியோர் இடுப்பில் குடத்தோடு அலைவர். அதையும் தாண்டினால் மூட்டுவலியோடு அப்பாக்காரர் சைக்கிளில் குடத்தை கட்டிக் கொண்டு போய் கொண்டு வருவார். இந்த வேலையற்ற கூட்டம் இப்படியேதான் அலையும். என்ன ஒன்று பால் குடத்தோட அளவு குறையலாம் - ஏன்னா கலக்க தண்ணீர் கிடைக்காதில்லையா, அதனால்... :(

July 25, 2007 9:12 AM  
Anonymous Anonymous said...

rajini fans pannurathu niyayam
ajith maari young generation actor ukku avanga fans pannunaa athu aniyaayam

enna kodumai sir idhu !

I condemn such acts and I would like to condemn the person who initiated this first :)

July 30, 2007 8:26 AM  
Anonymous Anonymous said...

Yellam Tamilan "Thala" Ezhuthu

August 01, 2007 9:33 AM  
Anonymous Anonymous said...

இந்த பாலாபிஷேகம் செய்யற பழக்கம் எங்கிருந்து வருது? கோயிலில்
இருந்து தானே! தினமும் எத்தனை லிட்டர் பாலும், பஞ்சாமிர்தமும் ,
நெய்யும் அபிஷேகம், கும்பாபிஷேகம் என்று வீணாக்குகிறார்கள்!. அத்துடன்
ஒப்பிட்டால் இது வெறும் ஜுஜுபி.

August 01, 2007 10:08 AM  
Blogger சிவபாலன் said...

அனானி

சூப்பர் கேள்வி?

August 01, 2007 10:11 AM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
((:-

August 01, 2007 11:16 AM  
Anonymous Anonymous said...

Dear Siva Balan.

Can you weight your self first. Rajini is a only eljible Star for such?????

Please go this.

http://sivabalanblog.blogspot.com/2007/06/fever.html

You don't have any ethics and moral right to think about Tamil soceity.

August 01, 2007 11:39 AM  
Blogger சிவபாலன் said...

அனானி தெய்வங்களா

முகமூடி இல்லாமலே வந்து கேள்வி கேட்க வேண்டியதுதானே?

உங்களை எல்லாம் என்னத சொல்லறது?

அந்த பதிவு சிவாஜி எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்று சொல்லத்தான் அப்பதிவு! (அது சரி! என நான் எங்கே சொன்னேன்? அந்த செய்தி துனுக்கு கூட "எந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக தான்..)

எந்த பதிவின் மீது உள்ள கடுப்பில் இங்கே வந்து குத்திக்கிறீங்கன்னு நான் சொல்லவும் வேண்டுமா?

August 01, 2007 12:02 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv