கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
பாடல்: கண்கள் இரண்டும் என்று
திரைப் படம்: மன்னாதி மன்னன்
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
நடிகை: பத்மினி
11 Comments:
நன்றி: http://psusheela.org/
என்னோட எப்பொழுதும் பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று,எங்கு ஒலித்தாலும் நின்று கேட்பேன். அடிக்கடி இது போல பாடல்களைப் போடுங்கள்.வேறு ஒரு வலைப்பதிவில் எனது நண்பர் இதே பாடலை தனது சொந்த குரலில் பாடி பதிவு செய்துள்ளார்.
சிபா,
சிக்சுவேசனை மறக்க வைக்கும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.
அருமையான பாடல்.
- அன்புடன்
ஜிகே
பி.எஸ்.வீரப்பா வில்லன்.
அவர் கூடரத்தில் பத்மினி கைதியாக.
சாட்டையைச் சொடுக்கிய வண்ணாம் வில்லன் கட்டளையிட, பத்மினி ஆடுவது போல காட்சி.
மிகவும் வேகமான ஆட்டம்.
சும்மா சுழன்று, சுழன்று ஆடுவார்.
பின்னணி ம்யூஸிக்கில் எம்ஜிஆர் குதிரையில் பறந்து வருவார்!
எனக்குப் பிடித்த முதல் பத்து பாடல்களில் இதுவும் ஒன்று!
அளித்தமைக்கு நன்றி, சிபா!
அருமையான பாட்டு...
ஆனா இது தான் கோயமுத்தூர் குசும்புங்கண்ணா.. நீங்க மட்டும் ஏனுங்க அமைதியா இருக்கீங்க..நடத்துங்க நடத்துங்க..:-))
சிபா,
பாட்டு
இங்கே இருக்கு !
வவ்வால்,
வாங்க..
நிச்சயம் முயற்சிக்கிறேன்.
வருகைக்கு நன்றி
GK,
என்ன பதிவு போட்டாலும் சிவாஜிதான் முன்நிலையில் இருக்கிறார்
VSK அய்யா
மிக்க மகிழ்ச்சி. அந்த காட்சியை கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள். நன்றி
மங்கை,
என்னங்க நீங்களே சிக்கவைத்திடுவீன்க போல.. Ha Ha Ha..
அமைதி தேடி...
GK,
சுட்டிக்கு நன்றி
Post a Comment
<< Home