Thursday, October 26, 2006

பூரி மசால் - இந்த வார ஜோக்...





கனவன் டாக்டர் என நினைத்துக் கொண்டு கம்பவுன்டரிடம்..

கனவன்: டாக்டர் என் மனைவிக்கு காது சரியாக கேட்கவில்லை. அவளை மருத்தவமனைக்கு அழைத்தால் வருவதில்லை. மிகவும் கூச்சப் படுகிறாள். அதனால், நீங்க நல்ல யோசனை ஒன்று சொல்ல வேண்டும்.

கம்பவுன்டர்: நீங்க நோயாளி இங்கே கூட்டிட்டு வந்தால் தான் சிகிச்சை தர முடியும்.

கனவன்: அவள் வரமாட்டிங்கறாளே. நீங்க ஏதாவது யோசனை சொல்லுங்க..

கமபவுன்டர்: சரி ஒரு ஐடியா தரேன்..நீங்க அவங்களுக்கு எவ்வள்வு தூரத்திலிருந்து பேசினால் கேட்பதில்லை என்று தெரிந்து சொன்னால் அதை வைத்து ஏதாவது செய்யலாம்.

கனவன்: சரிங்க அப்படியா ஆகட்டுங்க..



இப்பொழுது கனவன் மனைவியிடம் பரிசோதனை செய்ய வருகிறார்.



(சுமார் 40 அடி தள்ளி நின்று) கனவன் : மீனாட்சி, இன்றைக்கு நைட் என்னடி டிபன்..

மனைவி: எந்த ஒரு சத்தமும் இல்லை.



(இப்பொழுது சுமார் 30 அடியில் நின்று) கனவன் : ஏய் மீனாட்சி, இன்றைக்கு நைட் என்னடி டிபன்..

மனைவி: எந்த ஒரு சத்தமும் இல்லை.



(இப்பொழுது சுமார் 20 அடியில் நின்று) கனவன்: ஏன்டீ, இன்றைக்கு நைட் என்ன டிபன்..

மனைவி: எந்த ஒரு சத்தமும் இல்லை.



(இப்பொழுது சுமார் 10 அடியில் நின்று) கனவன் : ஏம்மா மீனாட்சி, இன்றைக்கு நைட் என்ன டிபன்..




இப்பொழுது, மனைவி: பூரி மசால் என்று நாளு முறை சொல்லிட்டேன்..

18 Comments:

Blogger bala said...

சிவபாலன் அய்யா,

பூரி மசால் ஜோக் சூப்பர்.

பாலா

October 27, 2006 8:11 AM  
Blogger Sivabalan said...

பாலா

வருகைக்கு நன்றி

October 27, 2006 8:27 AM  
Blogger வெங்கட்ராமன் said...

நல்லாயிருக்குன்னு நான் சொன்னது உங்கள் காதில் கேட்டதா. . . .?

October 27, 2006 8:40 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா...!
ஜோக் நன்றாக இருக்கு !

அந்த கணவருக்கு காது கேட்காதா ?
வேறு ஏதாவது பிரச்சனையா ?
ஏன் கம்பவுன்டரை டாக்டர் என்று நினைக்கணும் ?
:)

October 27, 2006 8:52 AM  
Blogger ச.சங்கர் said...

:)D

October 27, 2006 8:55 AM  
Blogger இராம்/Raam said...

//வெங்கட்ராமன் said...
நல்லாயிருக்குன்னு நான் சொன்னது உங்கள் காதில் கேட்டதா. . . .? //

இந்த ஜோக் சூப்பரப்பு......

கோவிஞ்சுகாதிங்க சிபா. சும்மா லுல்லாயி'க்கு... :-))))

October 27, 2006 9:34 AM  
Blogger Sivabalan said...

வெங்கட்ராமன்,

10 அடியில் நின்று சொல்லுங்க.. அப்பதானே நான் பேசுவது உங்களுக்கு கேட்கும்.. Ha Ha Ha..

வருகைக்கு நன்றி

October 27, 2006 9:34 AM  
Blogger Sivabalan said...

GK,

ஜோக் சொன்ன அதில போய் இப்படி லாஜிக் கேட்கறேங்களே!!

வருகைக்கு நன்றி

October 27, 2006 9:40 AM  
Blogger Sivabalan said...

அன்புடன்...ச.சங்கர்,

வருகைக்கு நன்றி.

October 27, 2006 10:04 AM  
Blogger Sivabalan said...

முத்து,

இரசிதீர்களா!!

வருகைக்கு நன்றி

October 27, 2006 10:06 AM  
Blogger Sivabalan said...

ராம்,

நானும் அவருடைய டைமிங்கை இரசித்தேன்.

வருகைக்கு நன்றி

October 27, 2006 10:08 AM  
Blogger நன்மனம் said...

//கனவன் டாக்டர் என நினைத்துக் கொண்டு கம்பவுன்டரிடம்..//

சரி... கணவனுக்கு கண்ணு தான் தெரியலனு நெனச்சேன்....

//பூரி மசால் என்று நாளு முறை சொல்லிட்டேன்..//

காதும் கேக்கலியா.... சுத்தம்.....

ஜோக் சூப்பர்ங்க சி.பா.

:-)

October 27, 2006 11:08 AM  
Blogger சத்தியா said...

ஹா... ஹா... நல்ல ஜோக்.

October 27, 2006 11:19 AM  
Blogger சத்தியா said...

ஹா... ஹா... நல்ல ஜோக்தான்.

October 27, 2006 11:20 AM  
Blogger Sivabalan said...

நன்மனம்,

இரசிதீர்களா!! மகிழ்ச்சி!

வருகைக்கு நன்றி

October 27, 2006 11:57 AM  
Blogger Sivabalan said...

சத்தியா,

வருகைக்கு நன்றி

October 27, 2006 11:58 AM  
Blogger கதிர் said...

:)))

சூப்பர்!

October 27, 2006 12:17 PM  
Blogger Sivabalan said...

தம்பி,

இரசிதீர்களா!

வருகைக்கு நன்றி

October 27, 2006 6:31 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv