Tuesday, August 21, 2007

கம்யூனிஸ்டுகளே இது சரியா?

அணுசக்தி ஒப்பந்தத்தை குப்பைத் தொட்டியில் வீச இடதுசாரிகள் முயலுவதன் மூலம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.


முன்னாள் தூதரும், இந்தியாவின் அணுசக்தி துறையில் முக்கிய பங்கு வகித்தவருமான அருந்தாதி கோஷே கூறுகையில், அமெரிக்காவுடனான நமது அணுசக்தி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுமானால் சீனாவுக்கு தலைமை அந்தஸ்து கிடைத்து விடும். இடதுசாரிகளும் அவர்கள் விரும்பியதை அடைந்து விடுவார்கள். இதற்கு மாறாக இந்த ஒப்பந்தம் அமலாக்கப்படுமானால் ஜப்பான், ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவுடன் ஒத்துழைக்கும் என்றார்.

இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தாவிட்டால் தொழில்நுட்பத்தில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும். ஆசியாவில் சீனா தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும். இந்தியா 2வது இடத்தில் தான் இருக்க வேண்டும் என்று சில புத்திசாலிகள் நினைக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான இந்தியர்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்று அணுசக்தி துறையின் இன்னொரு நிபுணர் கே. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ராணுவ மற்றும் ஆயுத ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் சி. உதய் பாஸ்கர் கூறுகையில், அணுசக்தி ஒப்பந்தத்தை மாற்றி அதை சீர்குலைக்க வேண்டும் என்றே முயற்சி நடக்கிறது. அணு ஆயுத சோதனை நடத்துவதால் மட்டும் இந்தியாவுக்கு பலம் கிடைத்து விடாது. இந்த ஒப்பந்தம் மூலம் உலக அளவில் இந்தியா சக்தி படைத்த நாடுகளில் ஒன்றாகி விடும். இந்த ஒப்பந்தத்தை தவற விட்டால் வருங்காலத்தில் இதுபோன்ற சந்தர்ப்பம் இந்தியாவுக்கு கிடைக்காமல் போய்விடும் என்றார்.


சென்னையைச் சேர்ந்த ஆய்வாளரும், மத்திய அமைச்சரவை செயலகத்தின் முன்னாள் கூடுதல் செயலாளருமான பி.ராமன், ஒரு ஆங்கில பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், இந்தியாவின் இறையாண்மை உரிமைகள் குறித்து கவலைப்படுவதாக கம்யூனிஸ்ட்கள் நடிப்பதை கைவிட வேண்டும். சீனா வருத்தம் அடையுமே என்பதற்காகத் தான் அவர்கள் அமெரிக்காவுடான உறவை எதிர்க்கிறார்கள். நமது வெளியுறவுக் கொள்கையை இடதுசாரிகள் போதிக்க அனுமதிக்க கூடாது. இது சீனாவுக்கு ஆதரவான நிலையில் கொண்டுபோய் விட்டு விடும் என்று எச்சரித்து உள்ளார்.

நன்றி: தினகரன்

0 Comments:

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv