ஆனந்த விகடனில் ஒரு கேலி துணுக்கு வந்துள்ளதாக படித்தேன்.
அந்த கேலி எதைப் பற்றி என்றால், தேசிய நெடுஞ்சாலை என்பதை தமிழ் நாட்டில் திராவிட நெடுஞ்சாலை என மாற்றிக்கொள்ளலாம் என கேலி செய்யப்பட்டுள்ளது.
ஆதிக்க சக்திகள் தனது விச நாக்கை அவ்வப்போது வெளி நீட்டும். இதுவும் அது போன்று தான்.
இதில் என்ன கொடுமை என்றால், படிப்பவன் திராவிடன் (தமிழன்). ஆனால் அவன் அடையாளங்களை எப்படி எல்லாம் அழிக்கலாம் என்று தனது குருர எண்ணங்களை வெளிப்படுத்தவே இது போன்ற ஆதிக்க சக்திகளின் ஊடகங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றன.
பெரியார், அண்ணா போன்ற பெருந்தலைவர்கள் போராடி ஒரு இன மக்களை விழிப்படையச் செய்தது இந்த திராவிடன் என்ற உணர்வை வைத்துதான். அந்த உணர்வின் மூலம்தான் நாம் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ஒன்று கூடட முடிந்தது என்றால் மிகை ஆகாது.
இன்னும் அந்த போராட்டங்கள் மீதம் இருக்கிறது என்பதை காட்ட இங்கே ஏராளமான உதாரணங்கள் உள்ளது. அதை இங்கே பல பதிவுகளில் படித்திருப்பீர்கள். அந்த வகை சார்ந்தது தான் இந்த இடுக்கையும்.
இப்படி ஒரு கேலி துணுக்கை வெளியிட்டு தனது மன அழுக்கை வெளிக்காட்டிக் கொண்ட ஆனந்த விகடன் வார இதழக்கு எனது எதிர்ப்புகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சரி, இந்த இடுக்கையில் இன்னுமொரு முக்கியமான விடயம், கொஞ்சம் துறை சார்ந்த கருத்து, அது இங்கே பகிர்ந்துகொள்வது அவசியம் என கருதுவதால் இங்கே கொடுக்கிறேன்.
முதலில், இந்தியாவில் சாலைகள் எப்படி வகைப்படுத்தப்படுகிறது என பார்ப்போம்.
1. அதி விரைவு சாலைகள் - மொத்தம் 200 கி.மீ.
2. தேசிய நெடுஞ்சாலைகள் - மொத்தம் 66,590 கி.மீ.
3. மாநில நெடுஞ்சாலைகள் - மொத்தம் 1,31,899 கி.மீ.
4. முக்கிய மாவட்ட சாலைகள் - மொத்தம் 4,67,763 கி.மீ.
5. கிராம மற்றும் இதர சாலைகள் - மொத்தம் 26,50,000 கி.மீ.
சரி, இதை நிறுவகிக்கவும், பராமரிக்கவும் தனித்தனி துறைகள் உள்ளன. எவ்வாறு என்றால், அதி விரைவு சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மேம்பாட்டு துறை கவனிக்கும். மற்ற சாலைகளை அந்த அந்த மாநில நெடுஞ்சாலைத்துறை கவனிக்கும்.
(இங்கே நெஞ்சாலைத்துறை ஊழியர்கள் போராட்டும் கூட மாநில நெடுஞ்சாலைத்துறையை எதிர்த்துதான். இது ஒரு சிறு குறிப்பு.)ஆனால், எல்லா சாலைகளிலும் மாநில மற்றும் மத்திய அரசின் பங்களிப்பு இருக்கும். அவ்வாறு தான் நிதி ஒதுக்கீடுகள் இருக்கும். இந்தியாவில் சாலை ஆதாரங்களுக்கு நாம் பெருமளவு உலக வங்கியைத்தான் சார்ந்திருக்கிறோம். அதற்கு பெருமளவு வட்டியும் கட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்.
இந்த சாலைகள் நிர்மாணிக்கும் போது, அதில் எல்லா பிராதான சாலைகளிலும் இந்திய ராணுவ டாங்கிகள் வந்து செல்லும் அளவுக்கு அமைக்க வேண்டும். அதாவது அந்த டாங்கிகளை தாங்கும் சுமை சக்தி சாலைகள் மற்றும் அதில் வரும் மேபாலங்களுக்கு இருக்க வேண்டும்.
முக்கிய மேபாலங்கள் மற்றும் சாலைகளின் வரைபடங்கள் மற்றும் விபரங்கள் இராணுவத்திற்கு அனுப்ப வேண்டியது ஒவ்வொரு நெடுஞ்சாலைத்துறையின் கடமை. சில சமயம் அதை இராணுவம் நேரில் சென்று சோத்திக்கலாம். ஆனால் அது போல் நடப்பதில்லை.
ஆக, இது போன்று நெடுஞ்சாலைகளை வகைப்படுத்துவது அந்த துறை சார்ந்த செயலே. அதாவது அதை நிறுவகிக்கவும் பாரமரிக்கவும் வகைப்படுத்தும் ஒரு செயல்.
இதில் தேசிய என்பது தேசியம் என பொருளாகாது.
இவ்வளவு காலம் பத்திரிக்கை துறையில் இருக்கும் ஆ.வி.க்கு இது தெரியாமலா இருந்திருக்கும்?
அல்லது, நம் தோழர்களை சீண்டிப் பார்க்கும் எண்ணமா?
நன்றி: National Highways Authority of India.