"பகுதி - 1" ,
"பகுதி - 2" தொடர்ச்சி...
ஆனால், இந்த அறிக்கைகளை வைத்து, பிற்படுத்தப்பட்ட இனங்களைச் சேர்ந்த தலைவர்கள், தங்கள் இனத்தின் மக்கள்தொகையை மிகைப்படுத்திக் காட்டி சலுகைகள் பெற முயற்சிக்கிறார்கள் என்று சில ஆதிக்க சாதி பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன.
ஆனால், எவ்வளவு குறைத்துச் சொன்னாலும், அதைவிடக் குறைவாகவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை கிடைத்து வருகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இழந்துவந்ததில் கொஞ்சத்தைக் கூட இந்த சமூகங்கள் பல மாநிலங்களில் பெறவில்லை என்பதுதான் சுடும் நிஜம் இந்தியாவில் 1931ல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு இப்படி நடைபெறவில்லை. சமூக நீதிக்காக தமிழகத்தில் எழுந்த போராட்டத்தின் விளைவாக, முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனை 1953ல் மத்திய அரசு அமைத்தது. அப்போது எம்.பி.யாக இருந்த காகா கலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த கமிஷன், 1955 மார்ச் 30ல் தன் அறிக்கையை அரசிடம் அளித்தது. இந்தியா முழுக்க 2,399 சாதிகளை பிற்படுத்தப்பட்ட இனங்களாக அடையாளம் காட்டிய கலேல்கர், 1961ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தார்.
வேலையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கலேல்கர், எல்லா கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 70 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றார். இது சாதிப் பிளவை அதிகரிக்கும் என கமிஷன் உறுப்பினர்களில் சிலரே முரண்பட்டார்கள். ஆனால்,
கலேல்கர் தெளிவாகச் சொன்னார்:
சாதியின் பெயரால் அடக்கி வைக்கப்பட்ட ஒருவரை, அந்த சாதிக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் மட்டுமே மேலே கொண்டுவர முடியும். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்இந்தப் பரிந்துரைகளை அப்போதைய அரசு ஏற்கவில்லை. ஜனதா ஆட்சியில் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது. 80ம் ஆண்டு டிசம்பரில் தன் அறிக்கையை அரசிடம் கொடுத்தார் மண்டல். சரியான புள்ளிவிவரங்கள் கிடைக்காததால் 1931ம் ஆண்டு எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை வைத்து, உத்தேச நிர்ணயமாக பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் என அவர் சொன்னார். தீவிரவாதம் தலைதூக்கியிருக்கும் பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாதபோது, அரசே இதைத்தான் செய்கிறது.
மண்டலின் பரிந்துரைகளை அமல்படுத்த பத்து ஆண்டுகள் கழித்து வி.பி.சிங் வரவேண்டி இருந்தது. அவரை தமிழக முதல்வர் கருணாநிதி வற்புறுத்த வேண்டியிருந்தது. அப்போதும்கூட, இட ஒதுக்கீடின் உச்சவரம்பு 50 சதவிகிதத்தை தாண்டக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனை இருப்பதால்,
வெறும் 27 சதவிகித இட ஒதுக்கீடே கிடைத்தது. அதையும் எல்லா இடங்களிலும் அமல்படுத்த இன்னமும் போராட வேண்டிய நிலை.52 சதவிகித மக்களுக்கு 27 சதவிகிதமே அரைகுறையாக கிடைத்திருக்க, இருப்பதையும் பறிக்க நீதிமன்றங்களைத் தூண்டும் வேலைதான், இது போன்ற குழப்ப கணக்கெடுப்புகள்!?