Tuesday, July 31, 2007

நீயூஸ் மீடியாக்களை எதால் அடிக்கலாம்?

மும்பையில் 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த பயங்கர குண்டு வெடிப்பில் 357 பேர் உடல் சிதறி பலியானார்கள். நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். பலர் கை, கால்களை இழந்தனர். தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை மும்பை தடா கோர்ட்டில் நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களுக்கான தண்டனை விவரங்களை தடா கோர்ட் நீதிபதி பி.டி.கோடே பல்வேறு கட்டங்களாக அறிவித்து வருகிறார்.

இந்த வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது சட்டவிரோதமாக ஏ.கே., 56 ரக துப்பாக்கியை வைத்திருந்தது, போலீசாருக்கு தெரிந்தவுடன் அதை அழித்தது போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தடா கோர்ட் இன்று தீர்ப்பு கூறியது.


இந்த செய்தியை எதோ சஞ்சய் தத் நாட்டின் தியாகி போல் சித்தரித்து, அவருடைய தங்கையுடன் கட்டித்தளுவும் படத்தை தினமலர் வெளியிட்டுள்ளது.




நாட்டின் பிரபலமான NDTV - நீதிபதியிடம் சஞ்சய்தத் கெஞ்சியதை "நண்பர்கள் போல் பேசிக்கொண்டார்கள் என வெளியிட்டுள்ளது."

அது போல் CNN IBN TV"அதே மாதிரித்தான் செய்துள்ளது."



எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு குற்றவாளிக்கு எதற்கு இப்படி ஒரு பில்டப். கேவலமாக உள்ளது.

எரிச்சலுடன் ..

Monday, July 30, 2007

கேத்தரின் ஸீட்டா ஜோன்ஸ்(Catherine Zeta Jones)- மினி பேட்டி - வீடியோ


கேத்தரின் ஸீட்டா ஜோன்ஸ் CNN-IBN டிவிக்கு ஒரு மினி பேட்டி வழங்கியுள்ளார். அதன் சுருக்கம் தமிழில்.

கேத்தரின் ஸீட்டா ஜோன்ஸ் நடித்து தற்பொழுது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் "NO RESERVATIONS" படத்தில் சமயற் கலைஞராக நடித்துள்ளார்.


கேள்வி: இந்த கதாப்பாத்திரத்தை நீங்கள் ஏற்க காரணம் என்ன?

பதில்: இதற்குமுன் இது போன்ற கதாப்பாத்திரத்தில் நடித்தது இல்லை. நல்ல கதை என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.


கேள்வி: இந்தியாவில் உள்ள இரசிகர்கள் இந்தப் படத்தில் நீங்கள் இந்திய உணவு தயாரிப்பது போல் நடிக்கவில்லை என ஏமாற்றம் அடைந்துள்ளனர்? (இதில் அவர் பிரென்ச் சமயற்கலைஞராக நடித்துள்ளார்)

பதில்: நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்தியர்கள் இருக்கும் சமுதாயத்தில் தான். இந்திய உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவேன். இந்தப் படம் நடிக்கும் போது கூட இந்திய உணவுகளை நினைவு படுத்திக்கொண்டேன்.


கேள்வி: இந்திய சினிமாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: எனக்கு இந்திய படங்களில் ஈடுபாடு உண்டு. நான் இந்தியாவில் இருந்தால் நிச்சயம் இந்திய படங்களில் நடித்திருப்பேன்.

வீடியோ Upload ஆக நேரமாகிறது "அதனால் இங்கே சென்று பார்க்கவும்."



Friday, July 27, 2007

வர்ணாசிரமம் - HOT PHOTO!!

படம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று யாகம் நடந்தது. யாகத்தை ஒட்டி நடந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா.

இதில் சிவப்பு குறியிட்டிருக்கும் நபரைப் பார்க்கவும். (குடையை எடுத்துச் செல்பவர்.)

எனக்குள் எழுந்த கேள்விகள்

1. ஏன் அந்த மனிதர் மட்டும் தோளில் துண்டோ அல்லது சட்டையோ அணியக்கூடாது.

2. இன்னும் இது போன்ற வழிமுறைகள் தேவையா?

3. உண்மையில் இதில் என்ன கவுரவம் VIPக்களுக்கு வந்துவிடப்போகிறது.

4. அந்த மனிதன் தன்னுடைய தொழிலைத்தான் செய்கிறார் என்றால், அதற்கு இன்னும் பழைய வர்ணாசிரம வழிமுறைகளை ஏன் கடைபிடிக்கவேண்டும்? மாற்றலாமே?

5. சில இடங்களில் மாறி இருக்கலாம்? மற்ற இடங்களில்?

இந்தப் புகைப்படத்தை கண்டவுடன் என்னுள் எழுந்த கேள்விகள் இவை? உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் எண்ணத்துடன் இங்கே.

இன்னுமொரு கேள்வியும் தோன்றியது.. குடை தூக்கும் மனிதன் ஏன் கடவுள் சிலையை தீண்டக்கூடாது.?

பல வருட போராட்டத்திற்கு பிறகு தற்போதைய முதல்வரின் முயற்சியால், அனைவரும் அச்சகர் ஆகலாம் என சட்டம் வந்துள்ளது. மகிழ்ச்சிதான். ஆனால், அதையும் சில சக்திகள் தடுத்து வருவது வருந்ததக்கது.

வரும் காலங்களில் வசந்தம் வரும் என நம்புவோம்!

Thursday, July 26, 2007

நல்ல படங்கள் - FANTASTIC PHOTOGRAPHY

இந்த படங்கள் நெட்டில் தேடும் போது கிடைத்தது. நன்றாக உள்ளது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.




Wednesday, July 25, 2007

இது ஓவியப் போட்டிக்காக


கடவுளை மற!! மனிதனை நினை!!

ராமர் பாலம் - ராமச்சந்திரன் - உமாபாரதி


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் கப்பல் போக்குவரத்து வசதி ஏற்படுத்துவதற்காக அந்தப்பகுதியில் கடலின் ஆழத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல் படுத்துவதுதான் சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இத்திட்டம் காரணமாக ராமாயண காலத்தில் ராமர் கட்டியதாக கூறப்படும் பாலம் இடிக்கப்படுவதாகவும், உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும் என சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

அந்த வகையில் பாரதிய ஜனசக்தி கட்சி தலைவரும், மத்தியபிரதேச முன்னாள் முதல்வருமான உமாபாரதியும் போராட்டம் நடத்திவருகிறார். அவர் மதுரையில் ஜீலை 6ம் தேதி பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது சேது சமுத்திரதிட்டத்தினால ராமர் பாலம் இடிக்கப்படும் நிலை உள்ளது அதனால் அந்த திட்டத்தை உடனே கைவிடவேண்டும் என வலியுறுத்தினார். அதை தொடர்ந்து அயோத்தியில் நேற்று (24-07-07)முதல் 7 நாட்கள் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தேசிய சுற்றுப்புற பாதுகாப்பு குழுவின் தலைவரும் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருமான சு.ராமச்சந்திரன் தன்னுடைய கருத்தையும் கூறியுள்ளார்.

10 வருடமாக கடலியல் படிப்பு படித்து உள்ளேன். சுற்றுப்புறச் சூழல் தேசிய கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறேன். சேது சமுத்திர திட்டப்பணிகள் தொடங்குவதற்கு முன் நடந்த முதல் கூட்டத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவன் நான்தான். கடல்நீரை பல்வேறு முறைகளில் பரிசோதித்து அதன் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தோம்.

அதன்படி, அவர்களும் கடல்நீரை பரிசோதித்தனர். அதற்கு தேசிய கமிட்டி அமைக்கப்பட்டது. ஒவ்வொருமாதமும் சேது சமுத்திர திட்டத்தின் முடிவுகளை விவாதிக்க குழு கூட்டம் கூடியது. இதுவரை சுற்றுச்சூழலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அங்கு, மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்படவில்லை. சொல்லப்போனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவில் மீன்பிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கமிட்டி குழுவின் கூட்டம் மதுரையில் வருகிற 30-ம் தேதி நடைபெற உள்ளது. அதில், சுற்றுச்சூழல் ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக வைக்கப்படும். எனவே, அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சேது சமுத்திர திட்டப்பணிகள் நடைபெறும் இடத்தில் ராமர் பாலம் இருப்பதாக ஒரு சிலர் கூறி வருகிறார்கள். தேசிய தொலை உணர்வு மையத்தின் வல்லுனர்கள் கடந்தமாதம் வந்து ஆராய்ச்சி செய்தனர். ராமர் பாலம் உள்ளது என்று கூறும் இடத்தில் மணல் திட்டு உள்ளது என்று அறிவித்து உள்ளனர். எனவே, ராமாயணத்துக்கும் மணல் திட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ராமர் பாலத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது, முழுக்க, முழுக்க கடலியல் சம்பந்தப்பட்டது, என கூறியுள்ளார்.


எனக்கு சில சந்தேகங்கள், இவ்வளவு பெரிய திட்டம் ஆரம்பிக்கும் முன், பல நிலைகள் திட்டம் சம்பந்தமாக, திட்டத்தினால ஏற்படும் பயன்கள், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் விளைவுகள், நிச்சயம் அலசி ஆராயப்பட்டிருக்கும். அதுவும் அந்த அந்த நிபுனர்களை வைத்துதான் ஆராயப்பட்டிருக்கும். அப்படி இருக்க இது போன்று தீடீர் போராட்டங்கள் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைகோ போன்றவர்களின் மவுனம் இன்னும் ஆச்சர்யம்.

திட்டம் நிறைவேறுமா அல்லது கைவிடப்படுமா? வரும் காலங்களில் தெரியும்.

Tuesday, July 24, 2007

SIX SIGMA தர நிர்ணயம்

SIX SIGMA என்பது தர நிர்ணயம் செய்ய உதவுவது. இதன் மூலம் துல்லியமான தர நிர்ணயம் செய்ய முடியும். மற்றபடி இந்த PPTயில் சற்று விளக்கமாக கொடுத்துள்ளார்கள். எப்பொழுதும் போல் இதுவும் இமெயிலில் வந்தது. உங்கள் பார்வைக்கு..




மேலும் விபரங்களுக்கு " இங்கே சென்று பாருங்கள்.."

"இங்கேயும் பார்க்கலாம்.."

இது போல் நிறைய இருக்கு..

Monday, July 23, 2007

உயர்சாதியினரின் மலம் - வால்மிகி அள்ள வேண்டும்.

கோகாத், மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கே வால்மிகி என்ற சாதி பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சாதி அமைப்பு முக்கோணத்தின் அடிமட்டத்தில் இருக்கும் மக்கள். அதாவது தாழ்த்தபட்ட மக்கள். இவர்கள், கிட்டதட்ட அடிமை போன்று உயர்சாதியினரின் மலத்தை தினமும் அள்ள வேண்டும். இவர்கள் வேறு ஏந்த வேலைக்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், இதற்கு அவர்கள் பெறும் ஊழியம் ஒரு மாதத்திற்கு வெறும் ரூ 20. அதே வீட்டில் உணவிற்காக கையேந்தி நிற்க வேண்டும்.

இது சம்பந்தமாக உயர்சாதியினர் ஒருவர் கூறியது "இந்த வேலையை அவர்கள்தான் செய்ய வேண்டும். அவர்கள் செய்யவில்லை என்றால் யார் செய்வது?" என்றார்.

இது போன்று வால்மீகி சாதியினர் மலம் அள்ளுவதால் அவர்களை மற்றவர்கள் தீண்ட மறுக்கின்றனர். அதாவது முடிதிருத்தம் செய்வோர், அவர்களுக்கு முடிதிருத்தம் செய்ய மறுகின்றனர். இதனால் அவர்கள் முடிதிருத்தம் செய்ய சுமார் 20 கி.மீ. செல்ல வேண்டியுள்ளது.

""இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி பிரிவு 15ல் "எந்த மனிதரையும் சாதி அடிப்படையில் பேதம் காட்டக்கூடாது. எல்லா மனிதர்களும் பொது இடத்திற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள்".""


இருப்பினும் இதை நடைமுறைப்படுத்துவதில் இன்னும் பல சாவல்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கு வால்மிகி சாதியினர் ஒரு சாட்சி.

இந்த வால்மிகி சாதியினர் பொது இடத்தில் தண்ணீர் எடுக்கவோ, கடவுள் இருக்குமிடத்திற்கு செல்லவோ முடியாது. டீ கடை, உணவகங்களில் இவர்களுக்கு தனி பாத்திரங்களில் தான் எல்லாம் பரிமாரப்படுகிறது.

பகவதி பிராசாத் குமார் என்ற பிராமணர் கூறுகையில், "நாங்கள் பல வருடங்களாக மதச் சடங்குகள், பூஜைகள் செய்து வருகிறோம். ஆனால் நாங்கள் வால்மிகி சாதியினருடன் அமர்ந்து உணவு உட்கொள்ளும் தவறை இது வரை செய்ததில்லை." என்றார்.

2003ம் வருடம் மத்திய பிரதேச அரசாங்கம், "அனைத்து மலம்களிக்கும் இடத்தை பொது சாக்கடையில் கலக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றது. ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. இன்னும் வால்மிகி சாதியினர்தான், மலம் அள்ளுகின்றனர்.

சுமார் 20 வருடங்களாக இது போன்று மலம் அள்ளும் சுதா என்ற பெண், அதன்
துருநாற்றத்தினால் மூச்சு திணறல் நோய், ஆஸ்துமா, டி,பி மற்றும் மஞ்சக்காமலையால் அவதிப்படுகிறார். இது போன்று கிட்டதட்ட மலம் அள்ளும் அனைவரும் அவதிப்படுகின்றனர்.

மேலும், மலம் அள்ளும் ஒருவர், "என்னால் மலத்தை தினமும் பார்க்கமுடியவில்லை. அதன் துருநாற்றத்தினால் என்க்கு தூக்கம் வருவதில்லை. அதனால் மது அருந்தினால்தான் தூக்கம் வருகிறது." என்கிறார்.

இதில், பூரி என்ற மற்றொரு பெண், திருமணம் முடிந்து சுமார் 10 வருடங்களாக இதை செய்வதாகவும், முதலில் மிகவும் கடினாமாக இருந்ததாகவும் அதனால் வாந்தி எடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் அது நாளைடைவில் பழகிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதில் தனக்கு நாண்கு குழ்ந்தைகள் இருப்பதாகவும் கணவன் குடித்துவிட்டும் சீட்டு ஆடிக்குகொண்டும் தான் கொண்டுவரும் பணததையும் பிடிங்கிக்கொள்ளுவதாகவும் கூறியுள்ளார். இதனால் தான் வருமையில் வாடுவதாகவும் கூறியுள்ளார்.


உண்மையில் இது மிகவும் வேதனைக்குறிய விசயம். இந்த நிலைமை மாறி எல்லோரும் மனிதர்களாக பார்க்கும் நாள் வரவேண்டும். மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலம் ஒழிய வேண்டும். மாற்றம் வரவேண்டும்.

இந்தக் கொடுமையை வெளிக்கொண்டுவந்த CNN-IBN TVக்கு எனது நன்றிகள். இது சம்பந்தமான CNN-IBN TVயின் வீடியோ கிழே.



மிகுந்த மனபாரத்துடன்.

சிவபாலன்

Saturday, July 21, 2007

இவர்களைத் திருத்தவே முடியாதா!?

எத்தனையோ கட்டுரைகள், பட்டிமன்றங்கள் இன்னும் என்ன உண்டோ அவ்வளவும் இதை நிறுத்த சொல்லி கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இதில் புதிது புதிதாக நட்சத்திரங்கள் உருவாகி, அவர்களுக்கும் இது போல் நடந்துகொண்டுதான் இருக்கிறது.!

இந்த படத்தை நான் தமிழ் முரசு நாளிதழில் சென்னை பதிப்பில் மூன்றாவது பக்கத்தில் தான் பார்த்தேன். அதில், இது நடந்தது நாகர்கோவிலில் என்று இருந்தது. சரி, நாகர்கோவில் பதிப்பில் எந்த பக்கத்தில் இருக்கிறது என்று பார்க்கலாம் என சென்றால், அதிர்ச்சி!

ஆம், முதல் பக்கத்தில் பாதி பக்கத்திற்கு இந்த படம்தான். சரி, இது சாதரண மாலை இதழ், என விட்டுவிடலாம் என்றால், இது போன்ற புகைப் படத்தை வெளியிட வைத்தது எந்த சக்தியாக இருக்கும்? என்ற சிந்தனை எனக்கு..

ஆனால் என்னால் யூக்கிக்க முடிகிறது.!

எனக்கு மனதில் உதிப்பதெல்லாம், இவர்களை திருத்த முடியாதா? என்பதுதான். எப்படி? Million Dollar Question! ..ம்ம்ம்ம்ம்ம்

‘தல’ க்கு பாலாபிஷேகம்... நடிகர் அஜித் நடித்த கிரீடம் படம் நாகர்கோவில் ஸ்ரீகார்த்திகை தியேட்டரில் இன்று வெளியானது. அவரது கட்அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

இந்தப் படத்தை சற்று பெரிதாக்கி பாருங்கள். அந்த இளைஞர்களின் முகத்தில் தெரியும் பெருமை, சாதனை செய்த பூரிப்பு! எல்லாம்..ம்ம்ம்ம்ம்ம்

தொழில்துறையில் பின் தங்கிய மாவட்டங்கள் என தென் மாவட்டங்களை சொல்வதுண்டு. அனால் இது பாரபட்சமின்றி எல்லா மாவட்டங்களிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த வரிசையில் தற்பொழுது சேர்ந்துகொண்ட நட்சத்திரம் "த்ரிஷா".

Friday, July 20, 2007

உங்களுக்கு தெரியுமா? (DID YOU KNOW?)

Thursday, July 19, 2007

சுடச் சுட - புகைப்படப் போட்டிக்காக!!

போட்டிக்காக- 1


காலை நேரம், இல்லினாய், அமெரிக்கா நாள்: ஜீலை, 19, 2007

----------------------------------------------------------------------------


போட்டிக்காக- 2



மாலை நேரம், பட்ட்ர்பீல்ட் சாலை, லிபர்டிவில், இல்லினாய், அமெரிக்கா
நாள்: ஜீலை, 19, 2007

------------------------------------------------------------------------------


இது கொசுறு..


இந்த பெட்ரோல் பங்க் செல்ல முயலும் போதுதான் எனக்கு விபத்து நடந்தது.ம்ம்ம்.. இந்த இடத்தை பார்க்கும் போதெல்லாம எரிச்சல்..ம்ம்ம்ம்ம்ம்ம்.. (இப்ப இங்கே போய் கேஸ் போடுவதே இல்லை)
இடம்: IL176, லிபர்டிவில், இல்லினாய், அமெரிக்கா
நாள்: ஜீலை, 19, 2007



பட்ட்ர்பீல்ட் சாலை, லிபர்டிவில், இல்லினாய், அமெரிக்கா
நாள்: ஜீலை, 19, 2007


இல்லினாய், அமெரிக்கா
நாள்: ஜீலை, 19, 2007


இல்லினாய், அமெரிக்கா
நாள்: ஜீலை, 19, 2007

"மங்கை" சொன்ன Memory Triggers



நமது மூளையில் ஏகப்பட்ட விசயம் இருக்கு.. அதில் ஒன்று இந்த Memory Triggers . இதைப் பற்றி மங்கை மிக அழகா ஒரு பதிவு போட்டிருக்காங்க.. நிறைய பேர் படித்திருப்பீர்கள். இல்லை என்றால் " இங்கே போய் படித்துவிட்டு வாங்க..."



சரி, இப்ப என்னுடைய Memory Triggers

1. LIFEBOUY SOAP - அந்த காலத்தில் செங்கல் Sizeக்கு வரும். அதனுடைய வாசனை வந்தாலே எனக்கு எங்க தாத்தா பாட்டி நியாபகத்திற்கு வருவாங்க. ஏனென்றால், நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை எனது தாத்தா பாட்டிதான் குளிக்க வைப்பாங்க.. அதுவும் அந்த சோபில்.. அதன் மனமே தனி சுகம். பெரிய அடுப்பில் நிறைய தண்ணீர் வைத்து மரங்களுக்கு நடுவே ஆனந்தமான குளியல். இப்ப நினைத்தாலும் மகிழ்ச்சியா இருக்கு.

2. தக்காளி சாதம். இதன் சுவை எங்கே சாபிட்டாலும் எங்க சின்னமா நியாபகத்தில் வந்துபோவாங்க.

3. Black Tea வாசனை. என்னுடைய முன் நாள் Boss வந்து போவாரு. ஏனென்றால் அவருக்கு பாதி நாள் Black Teaதான் சாப்பாடு.

4. விபூதி வாசனை - இதில் எல்லா விபூதியும் ஒரே வாசனை வராது. அந்த பழநி சித்தனாதன் விபூதிக்கு ஒரு வாசனை உண்டு. அது எப்பவாவது நுகர்ந்தால் எனக்கு சிறுவயதில் மருதமலையில் இருந்த நியாபகம் வரும்.

5. அரச மரத்தின் வாசனை வந்தால் எனக்கு நான் படித்த டியூசன் சென்டர் நியாபகத்திற்கு வரும். அது மிகப் பெரிய அரச மரம். அரச மரம் என்றாலே விநாயகரும் வந்துவிடுவார். ஆம், அங்கே, விநாயகர், வெறும் மேடையில் அமர்ந்தவாறு. எப்பவுமே ஜில்லென்று இருக்கும். கிட்டதட்ட எல்லா வெள்ளிக் கிழமையும் சுண்டல் கிடைக்கும். ரொம்ப ரொம்ப ஜாலியான நாட்கள்.

துள்ளித்திரிந்த தொரு காலம்..

பள்ளிப் பயின்றதொரு காலம்..


இது மாதிரி நிறைய இருக்கு.. ஆனால் போர் அடித்துவிடும்.. அதனால இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

நீங்களும் உங்களுக்கு இருக்கும் Memory Triggers பற்றி பதிவிடுங்கள்.. படிப்போம் ஜாலியாக..

புஷ் - கமலஹாசனின் தசாவதாரம்- படங்கள்!






















Wednesday, July 18, 2007

இந்த கட்டிடம் எங்கே இருக்கிறது?




அண்ணா பல்கலைக் கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்ற அப்துல்கலாம் சம்மதித்துள்ளார். கவுரவ பேராசிரியராக பதவியேற்க 25ம் தேதி அப்துல்கலாம் அண்ணா பல்கலைக் கழகம் வருகிறார்.

பல்கலைக் கழகத்தில் விருந்தினர் இல்லத்தில் உள்ள ஒரு அறையில் தங்குகிறார்.

(பல்கலைக்கழகத்திற்குள் இரண்டு வருடம் சுற்றியிருக்கிறேன். இந்த கட்டிடம் எங்கே இருக்கிறது என தெரியவில்லை.)


அப்துல்கலாம் ராமானுஜம் கணினி மையத்தில் உள்ள ஒரு அறையை தனது அலுவலகமாக பயன்படுத்த உள்ளார்.

(இந்த கட்டிடம் முன்னாடியே உள்ளது. ஆனால் அவர் தங்கும் கட்டிடம்தான் நியாபகத்திற்கு வரவில்லை.யாருக்காவது தெரிதால் பகிர்ந்துகொள்ளவும். ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன்.)

Tuesday, July 17, 2007

பூஜை பொருட்கள் - சிறுகதை.

ஊரில் பெரிய ஜோதிடர். அந்த வட்டாரத்தில் இவரை தெரியாதவர்களே இல்லை. ஆனால் அதெல்லாம் சுமார் 20 வருடங்களுக்கு முன். கிராமச் சூழ்நிலையில் இருந்து படிப்படியே நகரச்சுழ்நிலைக்கு மாறிவிட்ட அந்த ஊரில் சின்னசாமி சோதிடரின் வட்டம் குறுகிவிட்டது. சோதிட வருமாணத்தை வைத்தே தனது இரு மகன்களுக்கும் நல்ல படிப்பு சொத்து என நல்ல முறையில் முன்னேற்றிவிட்டார்.

ஆனால் ஓடி ஆடிய அந்த ஜீவன் தற்பொழுது மரணப்படுக்கையில்.. அது கிட்டதட்ட அவருடைய கடைசி நிமிடங்கள். அனைத்து நெருங்கிய பந்தகளும் அவருடைய வீட்டில்.

ஏம்பா சிவஞானம்! உங்க அப்பா கடைசியா எப்ப சாபிட்டார்?

இரண்டு நாளா வெறும் தண்ணீர்தான் உள்ளே இறங்குகிறது!

பதில் சொன்ன சிவஞானத்தை சற்று நிமிர்ந்து பார்த்தார் உறவினர் ஒருவர்.

அதற்குள் இன்னொருவர் அப்படின்னா, இன்றைக்கு இரவு கடப்பதே ரொம்ப கஷ்டம்..ம்ம்ம்..




சற்று நேரத்தில் சிவஞானத்தின் மகள் ஓடி வந்து, அப்பா "உங்களை உள்ளே உடனே வர சொன்னாங்க" என்றாள்.

கிட்டதட்ட முக்கிய உறவுகள் சின்னசாமியை சுற்றி..

ஒருவர். ஏம்பா, புறப்பாடு ஆரம்பித்துவிட்டது. எல்லாரும் தேவாரம் திருவாசகம் பாடுங்க. ஆன்மா நல்லதை கேட்டுவிட்டு செல்லட்டம்.

"நமசிவாய வாழ்க" என சிவஞானம் ஆரம்பிக்க அனைவரும் கூட பாட ஆரம்பித்தனர்.

ஆம், தனது சிறுவயதில் இருந்தே உழைப்பு உழைப்பு என்று இருந்த அந்த ஜீவன் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது.




சரி எல்லாம் நல்ல படியா முடிந்துவிட்டது. அவருக்கும் வயது 75ஐ கடந்துவிட்டது. அதுனால சும்மா அழுது ஆர்ப்பாடம செய்யாதீங்க. அடுத்தது ஆகவேண்டியதை பாருங்க.

அப்ப, பூஜை செய்து ஒப்படைத்துவிடலாமே! என்றார் ஒருவர்.

சிவஞானம் பூஜை பொருட்களுக்கு ஏற்பாடு செய்யுப்பா! என்றது வீட்டின் வெளியில் இருந்து வந்த ஒரு குரல்.

சிவஞானம் சற்று யோசித்தார். அட மணி 2.30 ஆகிவிட்டதே. இந்த அர்தராத்திரியில் எப்படி பொருள் வாங்குவது.?. ம்ம்..

அதற்குள் அவருடைய மைத்துனர் ஏங்க ரொம்ப யோசிக்கிறீங்க? நம்ம அண்ணாச்சி கடை, ரங்கசாமி அண்ணன் கடை, விசாலாட்சி ஸ்டோர் எல்லாம் இருக்கு. வாங்க பார்த்துக்கொள்ளுவோம்.





சரி என சிவாஞானம் தனது பைக்கில் மைத்துனரையும் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்.

அந்த கடைத்தெருவில் வெறும் நிசப்த்தம்.

"அண்ணாச்சி அண்ணாச்சி" என்று குரல் கொடுத்தனர். உபயோகமில்லை. சரி வா!, அடுத்த கடைக்கு செல்வோம்.

ரங்கசாமியை எப்படியோ எழுப்பிவிட்டார்கள். ஆனால் அவர், "சரக்கு சுத்தாம இல்லை", "நாளைக்குத்தான் கிடைக்கும் என்றார்!"

ஒருவித ஏமாற்றத்துடனும் ஒரு துளி நம்பிக்கையுடனும் விசாலாட்சி ஸ்டோர் சென்றனர். அங்கே இருந்த காவலாளி " கடை இரண்டு நாளா லீவு.! முதலாளி வீட்டில் விசேசம்.!"

சிவஞானதின் மனதில் கவலை தொற்றிகொண்டது.




அதற்குள் அவருடைய மைத்துனர்.. மாமா!, "ஒன்னு சொன்னா கோபிக்க மாட்டீங்களே?!"

"நம்ம சேவியர் கடையில் போய் பார்க்கலாம்!" என்றார் மைத்துனர்.

இந்து அமைப்பின் தலைவர் என்ற முறையில் கோவில் அருகில் "சர்ச்" கட்டும் விசயத்தில் சேவியருடன் போன வாரம்தான் பெருத்த வாக்குவாதம்.

இப்ப, அதுவும் இந்த நேரத்தில் அவனைப்போய் எழுப்பவது சரியா? என சிவஞானத்தின் சிந்தனை தடுமாறியது.

என்னா ஆனாலும் சரி.. கேட்டுப் பார்த்துவிடுவோம் என இருவம் சேவியர் கடை நோக்கி.




காலிங் பெல் சத்தம் கேட்டு வெளியே வந்த சேவியர்.. "யாரது".. "யாருங்க இந்த நேரத்தில்?!"

"நான் தான் சிவஞானம்.!"

சேவியருக்கு "திக்" என்று ஆகிவிட்டது.

அவனுடைய மனதில் பல எண்ணம்.. இருப்பினும்
"என்ன அண்ணே இந்த நேரத்தில்?" என்றான்.

"எங்க அப்பா கொஞ்ச நேரத்திற்கு முன் இறந்துவிட்டார்."

"அடடா.. சரிண்ணே??" என்றான் சேவியர்.

"அதான் பூஜை பொருள் வாங்கனும். அது தான் இங்கே! இந்த நேரத்துல உன்னை எழுப்பவதற்கு மன்னிச்சுவிடுப்பா.."

"என்ன அண்ணே இப்படி சொல்லிடீங்க.! முப்பது வருசமா தாயா புள்ளையா பழகுகிறோம். இது போல சமயத்தில் உதவாவிட்டால் எப்படி? "

"வாங்கண்ணே" என்று சிவஞானத்தின் கைகளை பற்றினான் சேவியர்.

Monday, July 16, 2007

தமிழகத்தின் புதிய முதல்வர் Dr.ராமதாஸ்?!!!


தி.மு.க. அரசை மூச்சுக்கு முந்நூறு தடவை ‘மைனாரிட்டி அரசு, மைனாரிட்டி அரசு’ என்று சொல்லி வரும் ஜெயலலிதா, ஒரு மைனாரிட்டி அரசின் ஸ்திரத்தன்மை எந்தளவுக்கு இருக்கும் என்பதைப் புரிய வைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்.

ஜெயலலிதா, திரைமறைவில் காங்கிரஸக்குள் கல்லெறிந்திருக்கிறார். கோஷ்டிகளுக்குப் பஞ்சமில்லாத காங்கிரஸில் பலவகையிலும் பலவீனமான பத்து எம்.எல்.ஏ.க்களைக் குறிவைத்து செங்கோட்டையனை இந்தக் குதிரை பேரத்தில் ஈடுபடவைத்திருக்கிறாராம். ஒரே சமூகத்தைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஐந்துபேர் இதற்குச் சம்மதித்துப் பணப் பரிவர்த்தனைகளும் முடிந்துவிட்டதாம்.

இது தவிர, ராமதாஸின் சம்பந்தியான கிருஷ்ணசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தி.மு.க.வை விளாசும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் என கணக்குப் போட்டு, கிட்டத்தட்ட காங்கிரஸை சரிபாதியாக உடைத்து விடும் வேலையும் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறதாம்.

இப்படி பா.ம.க., காங்கிரஸின் ஒரு பிரிவு, அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகியவற்றுடன், மார்க்சிஸ்ட்டை சரிக்கட்டி அழைத்து வந்துவிட்டால், இந்திய கம்யூனிஸ்டும் தானாக வந்துவிடும் என்று கணக்குப் போடும் ஜெயலலிதா, இதெல்லாம் சேர்ந்தால் நூலிழை மெஜாரிட்டியிலாவது ஓர் ஆட்சியை அமைத்துவிட முடியும் என்று நம்புகிறாராம்!’’

அதாவது, திட்டமிட்டபடி எல்லாம் கைகூடி வந்தால், அ.தி.மு.க. ஆட்சி அமைக்காதாம். இத்தனை தூரம் தன்னை நம்பிவரும் ராமதாஸின் மனம் குளிரும்படி பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைய வெளியில் இருந்து ஆதரவளிக்கவும் தயார் என்ற மனநிலையில் இருக்கிறாராம் ஜெ.

முழுவதும் படிக்க " குமுதம் ரிப்போட்டர் செல்லவும்... "

நன்றி: குமுதம் ரிப்போட்டர்

Sunday, July 15, 2007

சுவாரசியமான டிவி விளம்பரங்கள்.







Friday, July 13, 2007

The Adventures of Tintin - இலவச இ-புத்தகங்கள் - Weekend Special!

இந்த காமிக் புத்தகத்தை நிறைய பேர் படித்திருப்பீர்கள். எங்களுடைய கிராம நூலகத்தில் இருந்த இந்த புத்தகங்களுக்கு எப்பொழுதும் அடிதடிதான். அதுவும் இந்த காமிக் புத்தகங்களை யாரோ ஒருவர் பரிசாக கொடுத்து சென்றது.

நான் விரும்பி படித்த காமிக் புத்தகம்.



இந்த The Adventures of Tintin பற்றி சிறு குறிப்பு.

இது ஒரு பெல்ஜியம் காமிக் புத்தகம்.

வெளிவந்த ஆண்டுகள் 1929 - 1983.

இந்த கதையின் கதாநாயகன் பெயர்தான் Tintin. இவன் பெல்ஜியத்தை சேர்ந்த சுற்றுப்பயனம் செய்யும் ரிப்போட்டர்.

இவன் சுற்றுப்பயனம் செய்யும் போது சந்திக்கும் சவால்களை சுவை பட சிறுவர் சிறுமிகள் இரசித்து படிக்கும் வண்ணம் உருவாக்கி இருப்பார்கள்.

அந்த காமிக் புத்தகங்கள் சில எனக்கு கிடைத்தது.

கீழே உள்ள சுட்டிகளுக்கு சென்றால் Download செய்துகொள்ளலாம்.

உங்க வீட்டு குட்டீஸ்களிடம் கொடுங்க.. சுவாரசியமா படித்தாலும் படிப்பாங்க..






" FLIGHT 714 - Download Here.. "





" TINTIN AND THE PICAROS - Download Here.. "





" TINTIN IN TIBET - Download Here.. "






" TINTIN IN AMERICA - Download Here.. "





" CIGARS OF THE PHARAOH - Download Here.. "





" TINTIN IN SOVIET - Download Here.. "

பிறந்த நாள் வாழ்த்துக்கள் !




இன்று (13-07- 2007) தனது 54வது பிறந்த நாளை காணும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு எனது மனம் கனிந்த பிற்ந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.




1958இல் வைகை அனண கட்டி முடிக்கப்பட்டு, அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிக்கள் இருந்த சிற்றூர்கள் இந்திய வரைபடத்திலிருந்து துடைக்கப்பட்டபோது அம்மாவின் கையைப் பற்றி்க்கொண்டே இடுப்பளவுத் தண்ணீரில் அழுது வெளியேறுகிறான் ஓர் ஐந்து வயதுச் சிறுவன்.
இடம் பெயர்த்து நடப்பட்டதில் அவன் வாழ்க்கை வாடிக்கொண்டே வளர்கிறது. நிறைபெருக்காக நீர் நிறைந்திருக்கும் காலங்களில் வைகை அணையின் மதகுமேடுகளில் ஏறி நின்று கொண்டு "அதோ அஙகே கொக்கோ குருவியோ பறக்கிறதே! அதற்குக் கீழேதான் எங்கள் ஊர்" என்று நண்பர்களுக்க ஆசையோடும் துயரத்தோடும் அடையாளம் காட்டியிருக்கிறான்

42 ஆண்டுகளாய் நெஞ்சில் தூக்கிச் சுமந்த துயரத்தை ஆனந்தவிகடனின் பவளவிழாவில் இறக்கி வைக்கமாறு காலம் அவனுக்குக் கட்டளையிட்டது

எழுதினான்: அவன் பெயர்: வைரமுத்து

எழுதப்பட்டது: அதன் பெயர்: கள்ளிக்காட்டு இதிகாசம்

Thursday, July 12, 2007

உள்ளேயும் வெளியேயும் - இதில் நீ எங்கே? - PPT

Tuesday, July 10, 2007

மகாகவி பாரதியாருக்கு ஒரு சூப்பர் கேள்வி - GK

Mahakavi Bharathy Memorial Museum, Pondicherry

Cell in Central Prison, Cuddalore where Bharathy was imprisoned




நம்ம கோவி.கண்ணன் அவர்கள் மகாகவியிடம் நல்ல கேள்வியை கேட்டிருக்கிறார். நீங்கள் படித்திருக்கலாம். இல்லை படிக்காமல் விட்டிருந்தால் "இங்கே போய் படியுங்க.. " அங்கேயே உங்க கருத்தையும் சொல்லிவிடுங்க..

எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதை அந்த மாககவி உயிருடன் இருந்தால் நிச்சயம் ஒப்புக்கொள்வார். ( நல்ல பதிலையும் தந்திருப்பாரா?)

Monday, July 09, 2007

மகிழ்ச்சியா இருங்க.. எப்படி? PPT

Friday, July 06, 2007

இப்படி ஒரு விசயம் நடக்கிறது.. தெரியுமா?



வேள்விகளில் தேவாரம், திருவாசகத்தைப் பாட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதைக் கண்டித்தும், தமிழ் வழிபாட்டை வலியுறுத்தியும் கோவை காந்திபுரத்தில் தமிழ்நாடு தெய்வத்தமிழ் வழிபாட்டுரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரதம் நடந்தது. பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், முன்னாள் எம்.பி. ராமநாதன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Thursday, July 05, 2007

ராமதாஸ் சொல்வது சரி!?


கல்விக் கூடங்கள் திறக்கப் பட்டிருக்கின்றன. மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது. எல்.கே.ஜியில் இருந்து பட்ட மேற்படிப்பு வரையில் கல்வி அறுவடை தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இத்தகைய தவறுகள் நடக்கின்றன என்பதை சம்பந்தப் பட்ட அமைச்சர் ஒப்புக்கொள்கிறார். முதலமைச்சர் கருணாநிதியும் தவறே நடக்கவில்லை என்று அமைச்சர் எப்போதும் கூறவில்லை என்று சொல்கிறார்.

தவறு நடப்பதற்கான ஆதாரத்தையும், புகாரையும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்க வேண்டும் என்றும், அந்தப் புகாரை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிற இராமதாசு கொடுக்க வேண்டும் என்கிற போதுதான் பிரச்சனை வருகிறது.

மாணவர்களும் பெற்றோர்களும் ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும் அல்லது அவர்களிடமிருந்து ஆதாரத்தை நான் பெற்று தரவேண்டும் என்று சொன்னால் பிரச்சனையைத் திசை திருப்புகிற செயல் என்று தானே அர்த்தம்?

எங்களிடம் கல்லூரி நிர்வாகத்தினர் கட்டாயமாக நன்கொடை வாங்கினார் கள் என்று மாணவர்கள் புகார் கொடுத்தால் அந்த மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? கல்லூரி நிர்வாகம் பழிவாங்காதா? பழிவாங்காது என்று அரசு உத்தரவாதம் தருமா? புகார் கொடுத்ததற்காகப் பழிவாங்கப் பட்டால் அத்தகைய மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் தருகிறோம் என்று அரசு அறிவித்தால் மாணவர்கள் துணிந்து புகார் கொடுப்பார்கள்.

அப்படி ஒரு உத்தரவாதத்தை அரசு கொடுக்குமா? கொடுத்தால் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் பெற்றோர்களையும் புகார் கொடுக்க வரிசையில் நிறுத்தத் தயார். ஆதாரத்தைக் கொடுங்கள் என்று அமைச்சரும் கேட்கிறார். முதலமைச்சரும் அப்படி கேட்கிறார். அப்படியானால் இந்தத் தவறைத் தடுக்க வேறு வழியே இல்லையா? வேறு நடைமுறை இல்லையா? அரசுக்கு அதிகாரமே இல்லையா? அத்தனையும் இருக்கிறது.

1992ஆம் ஆண்டில் தமிழக அரசு கட்டாய நன்கொடை தடை சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதில் அடிக்கோடிட்டுக் கவனிக்க வேண்டியது, புகார் என்று கருதுவதற்குக் காரணம் இருக்கும் பட்சத்தில் அல்லது இந்தச்சட்ட விதிகள் மீறப்பட்டிருக்கிறது என்று கருதுவதற்கு காரணம் இருக்குமெனில் சம்பந்தபட்ட அதிகாரிகள் மற்றவர்கள் புகார் தர வேண்டும் என்று காத்திருக்காமல் தானே கல்லூரிகளுக்குச்சென்று சோதனை போட அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதாகும்.

ஆனால் இந்த அதிகாரத்தைக் கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஆட்சியும் பயன்படுத்தவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதாரத்தைத் தாருங்கள் என்று கேட்பதற்குப் பதிலாக இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுத்திருந்தால் கட்டாய நன்கொடை ஓரளவு கட்டுப் படுத்தப்பட்டிருக்கும். சட்டத்தில் கொண்டு வந்ததில் இருந்த வேகம் அதனை அமல்படுத்துவதில் இல்லை யென்பது வேதனை அளிக்கக் கூடியதாகும்.

Tuesday, July 03, 2007

சிவாஜி பார்த்திட்டீங்களா? - படம் சூப்பர்.


நான் இந்த வாரம் ஞாயிறு அன்று இந்தியன் ஸ்டோருக்கு சென்றிருந்தேன். அங்கே வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நண்பரை சந்தித்தேன். அங்கே நட்ந்த உரையாடல்


நான்: பாஸ், நல்லாயிருக்கீங்களா?!

அவர்: I am Fine!

நான்: அப்பறம் என்ன விசேசம். சிவாஜி பார்திட்டீங்களா?

அவர்: படம் சூப்பருங்க.. அதாவது ரஜினியை பிடிக்கும் என்றால் சிவாஜி பிடிக்கும். இல்லை என்றால் பிடிக்காது.

மேலும் அவர் சொன்ன விமர்சனம் ..


படத்தில் பிளஸ் :

இளைமயான ரஜினி. (க்ளோஸப் நல்லாயில்லை).

பாடல்களும் பாடல் ஆக்கிய விதமும் நிச்சயம் பாராட்ட வேண்டும். தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சி தெரிகிறது. நிச்சயம் மிகவும் சிரத்தை எடுத்து செய்திருக்கிறார்கள்.

சண்டைக் காட்சிகளும் நன்றாக வந்துள்ளது.

ரஜினி பஞ்ச் டயலாக்.. (உ.ம்) சிங்கம் சிங்களாத்தான் வரும்.

மொட்டை ரஜினி அசத்தியுள்ளார்


படத்தில் மைனஸ்:

இவ்வளவு சிரமப்பட்டவர்கள் கதை கொஞ்சம் சரி செய்திருக்கலாம். கதை பிளாட் நல்ல பிளாட்தான். ஆனால் ஓவர் மசாலா. இந்த கதை (மண் குதிரை) நம்பி இறங்கிய சிவாஜி டீமை ரஜினி எனும் தனி ஆளாய் கரை ஏற்றியிருக்கிறார். என்னதான் தொழில்நுட்பம் இருந்தாலும் சரியான கதை இல்லா படங்கள் தேறுவது கடினம். ஆனால் ரஜினி காப்பாற்றியிருக்கிறார்.


பொதுவான கருத்து:

படத்தில் லாஜிக் தேடுவது என்பது எல்லா படங்களும் எதார்த்தத்துடன் தான் வரவேண்டும் என்ற மனத்தடையாகக் கூறலாம். (ரஜினி படத்தில் எப்ப லாஜிக் இருந்தது. அதனால்தானோ என்னவோ சங்கர் புகுந்து விளையாடிவிட்டார்).

மொத்தத்தில் நல்ல பொழுதுபோக்கு. இங்கே போய லாஜிக் அது இது என் தேடுவோர் ரஜினியை பிடிக்காதது கூட ஒரு காரணம். (கமலின் இந்தியனில் கூட நிறைய லாஜிக் மிஸ் ஆகியிருந்தது.)

...........................


அதற்குள் அந்த ஸ்டோரில் கூட்டம் அதிகமாகிவிட சில விசாரிப்புகளுடன் விடைப்பெற்றோம்.


பி.கு. எனக்கும் ரஜினியை பிடிக்கும். (சிவாஜி பிடித்திருந்தது.)

Monday, July 02, 2007

கோவையில் மழை "அழகு" - படங்கள்!

வால்பாறையில் கனமழை காரணமாக கூழாங்கல் ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்கிறது. அடுத்த படம்: கன மழை காரணமாக நொய்யல் குளங்களுக்குத் தண்ணீர் அதிகளவில் வருகிறது. கோவை வீரகேரளம் அருகேயுள்ள கொலராம்பதி குளத்திற்குத் தண்ணீர் வந்துகொண்டுள்ளது.


கனமழை காரணமாக கோவை சாடிவயல் தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தோடுகிறது. சுண்ணாம்பு காளவாயில் நொய்யல் தடுப்பணையைத் தாண்டி சீறிப்பாய்கிறது வெள்ளம்.


நீலகிரியில் கனமழை தொடர்கிறது. குன்னூர் அருவங்காடு வெடிமருந்து ஆலை கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பணை நிரம்பியது. அங்கிருந்து வெளியேறும் உபரிநீர் காட்டேரி பகுதியில் அருவியாய்க் கொட்டுகிறது.


கனமழையால் கோவை நம்பியழகன்பாளையத்திலுள்ள வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்தோடுகிறது. வாய்க்காலில் Ôடைவ்Õ அடித்து குளித்து மகிழும் இளைஞர்கள்.


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.


கோவை பில்லூர் அணையின் மதகுகள் இன்று காலை திறக்கப்பட்டதையட்டி பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேட்டுப்பாளையம் ஓடந்துறை பகுதியில் உள்ள ஆற்றுப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


நீலகிரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது. ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் காமராஜர்சாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.


தண்ணீர் நிறைந்து அழகு ததும்ப காட்சியளிக்கும் சித்திரைச்சாவடி அணை.


கனமழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் சீறிப் பாய்கிறது. திருப்பூர் நொய்யல் பாலத்தில் நீந்த டைவ் அடிக்கிறான் ஒரு சிறுவன்.


நொய்யலில் வெள்ளம் காரணமாக ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 12 அடி நீர்மட்டம் உயர்ந்தது.


தமிழக, கேரள எல்லைப்பகுதியான மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சாவடியூர் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் மூழ்கியது.

நன்றி: மாலை முரசு
Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv